கார் ரேஸர் அஷ்வின் சுந்தர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற கார் பந்தய வீரர் அஷ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. காரை விட்டு வெளியே வர முடியாததால் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கார் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் 30 நிமிடங்கள் போராடி காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
முதலில் காரில் உள்ளவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் கார் நம்பரை கொண்டு விசாரிக்கையில், போரூரில் வசித்து வரும் கார் ரேஸர் அஷ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதிதா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தங்களின் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த மரணம் இயற்கையாக நிகழவில்லை என்றும், திட்டமிட்ட கொலை என்றும் அஷ்வினின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கார் மோதிய விதம், தீப்பிடித்து எரிந்தது இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இது இயற்கையான விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
அஷ்வின் கார் பந்தய வீரர் என்பதால் நிதானமாக கார் ஓட்டியிருப்பார். மேலும் மனைவியுடன் செல்லும் போது நிச்சயமாக பாதுகாப்பாக தான் காரை ஓட்டியிருப்பார் என்று சொல்கின்றனர். மேலும் விலை உயர்ந்த கார் என்பதால் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் வெளியே வராமல் போனதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், முந்தைய நாள் இரவு அஷ்வின் கலந்து பார்ட்டி குறித்து விசாரித்து, யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவரும் என்றும் அவரது உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற கார் பந்தய வீரர் அஷ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. காரை விட்டு வெளியே வர முடியாததால் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் கார் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் 30 நிமிடங்கள் போராடி காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
முதலில் காரில் உள்ளவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் கார் நம்பரை கொண்டு விசாரிக்கையில், போரூரில் வசித்து வரும் கார் ரேஸர் அஷ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதிதா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தங்களின் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த மரணம் இயற்கையாக நிகழவில்லை என்றும், திட்டமிட்ட கொலை என்றும் அஷ்வினின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கார் மோதிய விதம், தீப்பிடித்து எரிந்தது இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இது இயற்கையான விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
அஷ்வின் கார் பந்தய வீரர் என்பதால் நிதானமாக கார் ஓட்டியிருப்பார். மேலும் மனைவியுடன் செல்லும் போது நிச்சயமாக பாதுகாப்பாக தான் காரை ஓட்டியிருப்பார் என்று சொல்கின்றனர். மேலும் விலை உயர்ந்த கார் என்பதால் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் வெளியே வராமல் போனதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், முந்தைய நாள் இரவு அஷ்வின் கலந்து பார்ட்டி குறித்து விசாரித்து, யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவரும் என்றும் அவரது உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.