ஆப்நகரம்

காவிரிக்கான மெரினா போராட்டம் சேப்பாகத்திற்கு மாற்றம்- வேல்முருகன் அறிவிப்பு

காவிரிக்காக மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சேப்பாக்கத்தில் போராட்டம் நடக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Apr 2018, 9:54 am
காவிரிக்காக மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சேப்பாக்கத்தில் போராட்டம் நடக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil velmurugan34-6989-25-1477396899
காவிரி போராட்டம் சேப்பாகத்திற்கு மாற்றம்- வேல்முருகன்


காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், மக்கள் நலன் சார்ந்து இயங்கும் பல்வேறு இயக்கங்கள் ஆகியவை பங்கேற்கும் எனவும் வேல்முருகன் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் காவிரிக்கான மெரினா போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது

இந்நிலையில், மெரினாவில் நடக்கியிருந்த போராட்டம் சேப்பாகத்தில் நடக்கும் என வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து சேப்பாகம் பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி