ஆப்நகரம்

சிசிடிவி பழுது; வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பழுதடைந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 24 Apr 2021, 5:04 pm
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான 10 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் பெருமாள்பட்டு தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Samayam Tamil சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா


அதில் அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ரீராம் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா திடீரென்று பழுதடைந்தது.

ஆட்டோ மீது விழுந்த ராட்சத பாறை!

இதனை கண்ட திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் கண்காணிப்பு கேமரா ஒரு மணி நேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டது.

அடுத்த செய்தி