ஆப்நகரம்

கோயில் போன மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை!

கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 15 Dec 2020, 6:02 pm
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் குருசாமி நகர் நான்காவது தெருவில் வசித்து வருபவர் கதிர்வேல் இவரது மனைவி ஜெயலட்சுமி ( 56).
Samayam Tamil சென்னை அனகாபுத்தூர்
அனகாபுத்தூர் சென்னை


கதிர்வேல் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு இவரது மனைவி சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றுள்ளார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலில் இருந்து வெளியே வந்தபோது தான் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை காணவில்லை என கூச்சலிட்டு உள்ளார்.

சென்னையில் திருடுபோன 106 சவரன் நகை...மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகத்தில் மீட்டெடுப்பு!

உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு அப்பகுதியில் உள்ள சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் போலீசார் கோயிலுக்கு விரைந்து வந்து அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி