ஆப்நகரம்

நிரம்ப போகும் செம்பரபாக்கம் ஏரி, அரசு என்ன செய்கிறது?

தலைநகர் மற்றும் அதற்கு நீர் ஆதாரமாக விளங்கும் பகுதிகளில் பதிவான மழைக் காரணமாக நீர் நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது...

Samayam Tamil 15 Nov 2020, 4:29 pm
செம்பரம்பாக்கம் ஏரி 70 சதவீதம் நிரம்பியுள்ள சூழலில், மழை நீர் மேலாண்மைத் தொடர்பாக அரசு எதுபோன்ற பணிகளைச் செய்து வருகிறது என்பது இப்போதைய நேரத்தில் தலைநகர் வாசிகளின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது.
Samayam Tamil நிரம்ப போகும் செம்பரபாக்கம் ஏரி, அரசு என்ன செய்கிறது?
நிரம்ப போகும் செம்பரபாக்கம் ஏரி, அரசு என்ன செய்கிறது?


சென்னை செம்பரபாக்கம் எறியில் நீர் இருப்பு 2 ஆயிரத்து 576 எம்சியாக உள்ளது. அதாவது ஏரியின் மொத்தக் கொள்ளவில் இது 70. 6 சதவீதம் ஆகும்.

இந்த செம்பரபாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளவு 3 ஆயிரத்து 645 எம்சி ஆகும். இப்போதைய நேரத்தில் தொடர் மழைக் காரணமாகவும் செங்குன்றத்தில் நிறுத்தி வைக்கப்படும் கிருஷ்ணா நதியின் நீர் திறந்துவிடப்பட்டதாலும் செம்பரபாக்கம் ஏறி விரைவாக நிரம்பி வருகிறது.

செம்பரபாக்கம் ஏறி நிறையும் அதே நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளை பாக்கத்தில் உள்ள நீர்த் தொட்டிகளும் நிறைந்துவிடும் எனத் தெரிகிறது. இப்போதைய நேரத்தில் குறிப்பிட்ட 2 நீர்த் தொட்டிகளும் 125 எம்சி தண்ணீரைக் கொண்டுள்ளது. இவற்றின் மொத்தக் கொள்ளளவு 175 எம்சி ஆகும்.

மெல்ல மெல்ல சின்னதாகிவரும் தாம்பரம் பெரிய ஏரி!

இதற்கிடையே செம்பரபாக்கம் ஏறி அமைந்துள்ள பகுதியில் சுமார் 25 மிமீ மழை தினமும் பதிவாகினால் மட்டுமே, ஏரியில் எதிர்பாராமல் நீர் நிறைய வாய்ப்புள்ளது. இப்போதைய நேரத்தில் கடந்த சில நாட்களில் 12 மிமீ மழைதான் இந்தப் பகுதியில் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி