ஆப்நகரம்

chembarambakkam lake open:செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு...சென்னைக்கு வெள்ள அபாயம்?

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்படவுள்ளதால், அடையாறு ஆற்று கரையோரம் வசிக்கும் மக்கள் உள்ளிட்டோருக்கு பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Nov 2020, 10:47 am
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது பெ.ய்துவரும் தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.
Samayam Tamil செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு


இதனையடுத்து இன்று மதியம் 12 ஏரி திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து, பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், " தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து அதன் முழு கொள்ளளவான 22 அடியை நெருங்கிறது.

மேலும் ஏரிக்கு வினாடிக்கு 4,027 கன அடி அளவுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படவுள்ளது.

நிவர் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்: தொடரும் அதி கனமழை -அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

முதல்கட்டமாக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. நீர் வரத்தை பொருத்து உபரி நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கப்படும்.

இதன் காரணமாக ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, குன்றுத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும், அடையாறு ஆற்றின் இரு கரையோரமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.


தேவைப்பட்டால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் நிலவரத்தை கண்காணிக்க 15 ஆபிசர்ஸ்!

பயம் தேவையில்லை: "பருவமழை காலங்களில் ஏரிக்கு வரும் உபரி நீரை திறந்துவிடுவது வழக்கமான நடைமுறைதான். அத்துடன் ஏரியின் பாதுகாப்புக்காக உபரி நீரை சீரான கால இடைவெளியில் திறந்துவிட வேண்டியது அவசியமாகும். இதன்படியே, செம்பரம்பாக்கம் ஏரி நீர் தற்போது திறந்துவிடப்படவுள்ளது.

2015 சென்னை பெருவெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது முக்கிய காரணமாக பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ஏரி திறக்கப்படும் போதெல்லாம் மீண்டும் இங்கு வெள்ள பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் அவர்களை அறியாமலேயே ஏற்பட்டு விடுகிறது.

நிவர் புயல் எதிரொலி: 24 விமான சேவைகள் ரத்து!

இந்த அச்சம் தேவையற்றது. ஏரியில் நீர் திறந்துவிடப்படு்ம்போது அரசின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் நடந்து கொண்டால் போதும். அவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி