ஆப்நகரம்

சென்னை நந்தனத்தில் தொடங்கியது புத்தக கண்காட்சி திருவிழா!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44 ஆவது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 24 Feb 2021, 10:59 pm

ஹைலைட்ஸ்:

  • சென்னை 44 ஆவது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியது.
  • மார்ச் 9 ஆம் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெறுகிறது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சென்னை புத்தக கண்காட்சி
சென்னை புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த துணை முதல்வர் ஓபிஎஸ்
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (பிப்ரவரி 25) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரையில் 44 ஆவது சென்னை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
இதற்காக 700 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளில் பல லட்சம் நூல்கள் இடம்பெற உள்ள நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுழைவுக் கட்டணம் 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இணைய வழியில் நுழைவுச்சீட்டு பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்கு இனிமே 'அது' ஃப்ரீ!

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி. பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் இருப்பதன் காரணமாக வாசகர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நாளைக்கு ஸ்கூல் லீவு.... ரீசன் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!

புத்தகக் காட்சியை தொடக்கி வைத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "புத்தகக் காட்சியில் வாங்கும் நூல்களில் உள்ள நல்ல கருத்துகளை, வாழ்க்கையின் நடைமுறைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என வாசகர்களை கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி