ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்திற்கு புதிய முனையம் அமைத்திட மத்தியரசு ஒப்புதல்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒரு முணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Samayam Tamil 2 May 2018, 3:01 pm
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒரு முணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil 1200px-Chennai_airport_view_4.
சென்னை விமான நிலையத்திற்கு மேலும் ஒரு முனையம்


இதுக்குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுரேஷ் பிரபு, சென்னையில் விமான போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது மேலும் ஒரு முணையம் அமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என தனது ட்விட்டர் பதிவில் சுரேஷ் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 2,467 கோடி செலவில் கட்டப்படும் இந்த முனையம் மூலம் ஆண்டிற்கு 35 மில்லியன் பயணிகள் பயனடைவார்கள் என அவர் மேலும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டில் ரூ. 2,105 கோடி செலவில் புதிய முனையங்கள் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டன. ஆனால் இதன் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

சுமாராக 75-க்கும் அதிகமான முறை இந்த மேற்கூரை இடிந்து விழும் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கட்டப்படும் இந்த புதிய முனையம் மிகவும் பாதுகாப்பாகவும், வலுவாகவும் கட்டமைத்திட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி