ஆப்நகரம்

குளிர்பானம் என நினைத்து ஜெனரேட்டர் ஆயிலை குடித்த சிறுவன் பரிதாப பலி!!

குளிர்பானம் என கருதி, ஜெனரேட்டர் ஆயிலைக் குடித்த 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 3 Oct 2018, 8:36 pm
சென்னை: குளிர்பானம் என நினைத்து, ஜெனரேட்டர் ஆயிலைக் குடித்த 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil குளிர்பானம் என நினைத்து ஜெனரேட்டர் ஆயிலை குடித்த சிறுவன் பரிதாப பலி!!
குளிர்பானம் என நினைத்து ஜெனரேட்டர் ஆயிலை குடித்த சிறுவன் பரிதாப பலி!!


சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற 8 வயது சிறுவன், கடந்த மாதம் தனது பெற்றோருடன் சேர்ந்து, ஆந்திராவில் உள்ள தனது தாத்தா-பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி, தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மனோஜ் குமார், அங்கிருந்த ஜெனரேட்டர் ஆயிலை குளிர்பானம் என நினைத்து தவறுதலாக குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவரை, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த சிறுவன், வயிற்று வலி என கூறியதால், செப்.23 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்தனர். இந்த நிலையில், நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி