ஆப்நகரம்

திருமணமான 9வது நாளே கள்ளக்காதலனோடு வீட்டைவிட்டு ஓடிய மனைவி!!

சென்னை அம்பத்தூர் பகுதியில், திருமணமான 9வது நாளே மனைவி கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Sep 2018, 12:57 pm
சென்னை அம்பத்தூர் பகுதியில், திருமணமான 9வது நாளே மனைவி கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil திருமணமான 9வது நாளே கள்ளக்காதலனோடு வீட்டைவிட்டு ஓடிய மனைவி!!
திருமணமான 9வது நாளே கள்ளக்காதலனோடு வீட்டைவிட்டு ஓடிய மனைவி!!


சென்னை அம்பத்தூர் பாடி, சீனிவாச நகர், 3 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (31). மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தீபிகா (22) என்பவருக்கும், இம்மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின், தீபிகா தான் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அவரை மறக்க முடியவில்லை என்றும் கணவர் அசோக்குமாரிடம் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அசோக்குமார், வீட்டில் தீபிகா இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, தீபிகா அவரது காதலருடன் ஓடியிருப்பாரோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமான 9 வது நாளே மனைவி, கணவனைப் பிரிந்து காதலனுடன் ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி