ஆப்நகரம்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

சென்னையில் மோசடி புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

TNN 5 Apr 2017, 5:28 pm
சென்னையில் மோசடி புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil chennai builder held for forgery cheating
சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது


அனிருதன் ராமநாதன் (36) என்பவரே கைது செய்யப்பட்டவர். இவர், கயஸ் எஸ்டேட்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களில் ஒருவரான குலசேகர் உடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். இதன்படி, செம்மஞ்சேரியில் உள்ள குலசேகருக்குச் சொந்தமான இடத்தில் வீடுகளை கட்டி தருவதாகக் கூறியுள்ளார்.

எனினும், போலியான ஆவணங்களை பயன்படுத்தி, பெருங்குடி பஞ்சாயத்தாரிடம் இருந்து, அனுமதி பெற்று, அனிருதன் குறிப்பிட்ட இடத்தில் வீடுகளை கட்டியதோடு, அவரது பங்கு வீடுகளை ரூ.20 கோடி விலையில் விற்பனை செய்துள்ளார்.

எனினும், குலசேகரின் பங்கில் உள்ள வீடுகளை விற்பனை செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில் நஷ்டம் அடைந்த குலசேகர், தன்னை போலி ஆவணங்கள் கொண்டு ஏமாற்றியதாகக் கூறி, போலீசில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், அனிருதனை கைது செய்தனர்.

The central crime branch of the Chennai city police on Wednesday arrested a builder cum promoter for allegedly cheating his business partner.

அடுத்த செய்தி