ஆப்நகரம்

சென்னை தினம் 2022: பெசன்ட் நகர் பீச்சில் நடக்கும் தடபுடல் ஏற்பாடுகள்; கொண்டாட்டத்திற்கு தயாராகும் சென்னைவாசிகள்!

சென்னை தினத்தை ஒட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 Aug 2022, 1:30 pm
சென்னை நகரம் பிறந்த தினமான ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக, பெசன்ட் நகர் கடற்கரையில் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Samayam Tamil பெசன்ட் நகர் கடற்கரை


ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு 383 வது சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


இதற்காக பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான ஓவியப்போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓவிய போட்டிக்கான தலைப்பாக தேசியக்கொடி அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பட போட்டிக்கான தலைப்பாக சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த புகைப்படம் சென்னை மாநகராட்சி சார்பில் சோசியல் மீடியா பக்கங்களில் பகிரப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரி: சென்னைக்கு வரும் நீரில் மாஸான 3 திட்டங்கள்!

தொடர்ந்து சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டிக்கான தலைப்பாக சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சிறந்த ரீல்ஸ்க்கு பரிசும் மேலும் சென்னை மாநகராட்சி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும். மேலும் குறும்படத்திற்கான தலைப்பு சென்னை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி