ஆப்நகரம்

கொரோனா: வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

உணவகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றவில்லையென்றால், அவற்றின் நிர்வாகத்துக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Jul 2020, 10:45 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இந்த நிவையிவ், மாநகரில் ஜூலை 6 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil commissioner


இதையடுத்து தேநீர் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை உரிய நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அனைத்து வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னைக்கு முக்கிய அறிவிப்பு: 3 அடி இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு!

உணவகங்கள்,அழகு நிலையங்கள் முகப்பு வாயிலில் கண்டிப்பாக கைகளைக் கழுவுவதற்கு சானிட்டைசர் வைக்க வேண்டும். வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். கடைகளில் குளிர்சாதனங்களை இயக்கக்கூடாது. நிபந்தனைகளை மீறும் கடைகளில் அபாரதத் தொகை வசூலிக்கப்படும்.

அடுத்த செய்தி