ஆப்நகரம்

திடீர் கட்டுப்பாடு..மாணவர்கள் ஷாக்; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

மாணவ, மாணவிகளுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதித்து அனைத்து பள்ளிகளுக்கும் சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 17 Jun 2022, 11:42 am
சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பரவல் அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று முன்தினம் கணக்கின் படி கொரோனா நோய் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 221 என்கிற நிலையில் இருக்கிறது.
Samayam Tamil பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்


இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தவும், பள்ளி மாணவ மாணவிகளை தொற்றில் இருந்து பாதுகாக்கவும் அதிரடி நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி தமிழ்நாடு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வருகிற கொரோனா பரவலை உடனடியாக கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி அதன் மூலம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.



இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தும்படி கல்வி நிறுவன நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதையே பள்ளி கல்வித்துறையும் வலியுறுத்தி உள்ளது.

இடியை இறக்கிய ஓபிஎஸ்; எடப்பாடி அன்கோ கப்சிப்!

இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தொற்று பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் மண்டலங்களாக கருதப்படும் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 2 என்று மொத்தம் 8 நடமாடும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை குழுக்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த மண்டலங்களை சார்ந்த பொதுமக்கள் 1913 உதவி எண்ணில் தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு நடமாடும் குழு மூலம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.

அரண்டு போன அண்ணாமலை; அதிரடியில் இறங்கிய போலீஸ்!

அதே சமயம் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் நபர்கள் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் நோய் தொற்று பாதித்த நபர்கள் மற்றும் தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவசமாக பாரசிட்டமால் 500 மி.கி., வைட்டமின் சி 500 மி.கி. மற்றும் ஜிங்க் 50 மி.கி ஆகிய மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

இதற்காக சென்னை முழுவதும் ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களிலும் தலா 500 மாத்திரை தொகுப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் ‘மீண்டும் முதல்ல இருந்தா?’ என மாணவர்கள் அதிர்ச்சியில் கேட்கின்றனர்.

அடுத்த செய்தி