ஆப்நகரம்

வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி; மாநகராட்சி பரபரப்பு தீர்மானம்!

வாகன ஓட்டிகளுக்கு புதிய தலைவலியாக சென்னை பாண்டி பஜார் வாகன பார்க்கிங் கட்டணம் ஒரேயடியாக உயர உள்ளது.

Samayam Tamil 29 Jun 2022, 2:26 pm

ஹைலைட்ஸ்:

  • வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி
  • மாநகராட்சி பரபரப்பு தீர்மானம்
  • பாண்டிபஜார் கட்டணம் உயர்வு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயா் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயா் மகேஷ்குமாா், ஆணையா் (பொ) பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றது. இதை தொடா்ந்து தீா்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன.

இதில், முக்கியமாக சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாண்டி பஜாரில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில், 246 காா்களும், 562 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தலாம்.

வெல்லமண்டி புதிய ப்ளான்; குழம்பி தவிக்கும் எடப்பாடி!

அதேபோல் சென்னை பாண்டி பஜாரில் நடைபாதை பகுதியில் சாலையோர வாகன நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இங்கு பைக்குகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது



இந்நிலையில் பாண்டி பஜாா் நடைபாதை வளாகத்தை ‘ப்ரீமியம் பாா்க்கிங்’ இடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாலையில் ஒரு மணி நேரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த ரூ.15 மற்றும் காா்களை நிறுத்த ரூ.60 கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பார்க்கிங் கட்டணம் உயர உள்ள இந்த தகவல் வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி