ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி; அதிரடியில் இறங்கிய மேயர் பிரியா!

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சென்னை மேயர் பிரியா ராஜன் வேற லெவலுக்கு அதிரடியில் இறங்கி உள்ளார்.

Samayam Tamil 6 May 2022, 4:34 pm
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது பேரியக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் பலனாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 28 கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil சென்னை மேயர் பிரியா ராஜன்
சென்னை மேயர் பிரியா ராஜன்


அந்தவகையில், சென்னையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரையில் 37,11,689 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் இதுவரை 99% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 84% பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 08.05.202 அன்று கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து, பல்வேறு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று (05.05.2022) ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆயுள்; இந்து அமைப்பு பரபரப்பு பேட்டி!

இந்த கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன் பேசியதாவது:

வரும் 08.05.2022 அன்று சென்னையில் 3,300 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நினைவூட்டல் சீட்டு வழங்கப்பட உள்ளது.

இந்த சீட்டில் அவர்களுக்கு அருகில் உள்ள மெகா தடுப்பூசி முகாம் குறித்த தகவல்கள் இருக்கும். இந்த மெகா தடுப்பூசி முகாமிற்காக 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு வார்டுக்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட உள்ளது.

தெறிக்கவிட்ட திருமாவளவன்; அதிர்ச்சியில் திமுக வட்டாரம்!

இந்த பணிகளில் மாநகராட்சி, காவல் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக ரயில்வே துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட இருக்கின்றனர்.

எனவே, முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் தங்கள் பகுதிக்கு அருகாமையிலேயே நடக்க இருக்கும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சென்னை மேயர் பிரியா ராஜன் பேசினார்.

அடுத்த செய்தி