இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்துக்குள் அதிகம் பாதித்த பகுதியாக சென்னை மற்றும் அதன் அருகமை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை உள்ளன.
பெருநகரச் சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 12 ஆவது மண்டலமான ஆலந்தூர் பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
மண்டலம் 12இல் கொரோனா தொற்று பராவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் பொதுமக்களிடம் வியாபாரம் செய்துவந்த 42 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடந்த 2 தினங்களில் மூடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 7 நாட்களில் 22 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 1507 நபர்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வந்த பொதுமக்கள்
அனைவருக்கும் கபசூர குடிநீர், முகக்கவசம், multi vitamin மாத்திரைகள் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்பட்டன. இம்முகாம்கள் தொடர்ந்து தினசரி 5 இடங்களில் நடத்தப்படும்.
இதனிடையே கொரோனா சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அரசின் வழிமுறைகளின்படி சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிய வற்புறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அதிகமாக உள்ள குடிசைவாழ் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் மற்றும் முக கவசங்கள் இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
மண்டலம் 12 சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் கொரோனா சம்பந்தமாக தங்கள் சந்தேகங்கள், ஆலோசனை மற்றும் தகவல்களை அறிய ஆலந்தூர் மண்டல அலுவலகத்தை சார்ந்த பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9445190212, 044 22341702.
பெருநகரச் சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 12 ஆவது மண்டலமான ஆலந்தூர் பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
மண்டலம் 12இல் கொரோனா தொற்று பராவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் பொதுமக்களிடம் வியாபாரம் செய்துவந்த 42 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடந்த 2 தினங்களில் மூடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 7 நாட்களில் 22 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 1507 நபர்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வந்த பொதுமக்கள்
அனைவருக்கும் கபசூர குடிநீர், முகக்கவசம், multi vitamin மாத்திரைகள் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்பட்டன. இம்முகாம்கள் தொடர்ந்து தினசரி 5 இடங்களில் நடத்தப்படும்.
இதனிடையே கொரோனா சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அரசின் வழிமுறைகளின்படி சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிய வற்புறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அதிகமாக உள்ள குடிசைவாழ் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் மற்றும் முக கவசங்கள் இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
மண்டலம் 12 சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் கொரோனா சம்பந்தமாக தங்கள் சந்தேகங்கள், ஆலோசனை மற்றும் தகவல்களை அறிய ஆலந்தூர் மண்டல அலுவலகத்தை சார்ந்த பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9445190212, 044 22341702.