ஆப்நகரம்

சென்னையில் கொரோனா: எங்கு, எவ்வளவு பாதிப்பு?

சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் எவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 20 Apr 2020, 11:49 am
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் குறைவான அளவில் பாதிப்புகள் பதிவான நிலையில் நேற்று மீண்டும் நூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
Samayam Tamil சென்னையில் கொரோனா


அதிலும் தமிழ்நாட்டில் ஆரம்பத்திலிருந்து சென்னையில் அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. சென்னையில் மண்டலங்கள் வாரியாக பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 91 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதற்கடுத்தபடியாக திருவிக நகரில் 38 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் தேனாம்பேட்டையில் 36 பேரும், தண்டையார்பேட்டையில் 30 பேரும் கோடம்பாக்கத்தில் 29 பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பும், ஊரடங்கு தளர்வும்: தமிழ்நாட்டு நிலவரம் இதுதான்!

அண்ணாநகரில் 26 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெருங்குடி, அடையாறு ஆகிய பகுதிகளில் தலா ஏழு பேரும், ஆலந்தூர் வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் தலா ஐந்து பேரும் மாதவரத்தில் மூன்று பேரும் பாதிப்படைந்துள்ளனர். சோழிங்கநல்லூரில் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் 235 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 50 பேர் அதிகரித்த நிலையில் மொத்தமாக 285 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகள் அதிகமுள்ள அம்பத்தூர், மணலி மண்டலங்களில் கொரோனா தொற்று ஏதும் உறுதியாகவில்லை.



கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. வீடு வீடாகச் சென்று மக்களிடம் நடத்தப்படும் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா சோதனைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரேபிட் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விரைவு சோதனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி