ஆப்நகரம்

சென்னை: மாநகராட்சியால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட முடிவு!!

சென்னையில் மாநகராட்சி நிர்வாகிகளால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்க முடிவு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 17 Jul 2018, 11:46 pm
சென்னை: சென்னையில் மாநகராட்சி நிர்வாகிகளால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்க முடிவு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Samayam Tamil மாநகராட்சியால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட முடிவு!!
மாநகராட்சியால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட முடிவு!!


சென்னை மாநகராட்சியில் உள்ள 15 பகுதிகளில், கேட்பாரற்று கிடந்த சுமார் 5,882 வாகனங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் மற்றும் சென்னை போக்குவரத்து காவலர்கள் கையகப்படுத்தினர்.

இந்நிலையில், இதில் 293 வாகனங்களை ஏலத்தில் விற்க சென்னை போக்குவரத்து காவலர் துறை அனுமதியளித்துள்ளனர். இதையடுத்து, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஏலத்திற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள 5,589 வாகனங்களும் அடுத்த 15 நாட்களுக்குள் ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த ஏலத்தை நடத்தும் மெட்டல் ஸ்க்ரேப் டிரேடிங் கார்ப்பரேஷன் சேவை வரியாக 3% பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி