ஆப்நகரம்

குழந்தை கடத்தலைத் தடுக்க ‘நவீன தாயத்து!’

மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு அறிமுகமாக உள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 12:48 pm
மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு அறிமுகமாக உள்ளது.
Samayam Tamil new


மருத்துவமனைகளில் குழந்தைகளை கடத்தும் குற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், இதனை தடுப்பதற்கு சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைக்கும் தாய்க்கும் கால்களில் RFID (Radio Frequency Identification Tag) என்ற ரேடியோ அலைவரிசை அடையாளங்காட்டியை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தாயிடமிருந்து குழந்தையை பிரித்து எடுத்துச் சென்றால் அலாரம் ஒலிக்கும். மருத்துவமனையின் வாயில்களிலும் ரேடியோ அலைவரிசை கண்காணிப்பான் (Radio Frequency Reader) பொறுத்தப்படுகிறது. இதுவும் அந்த வழியே குழந்தையை எடுத்துவரும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பிவிடும்.

இதன் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து குழந்தை கடத்தப்படுவதைத் தடுக்க முடியும் என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

1844ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை 175 ஆண்டுளை நிறைவு செய்யும் விழாவை முன்னிட்டு இந்த புதிய பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

அடுத்த செய்தி