ஆப்நகரம்

மின்சார ரயில்கள் தாமதம்; பயணிகள் அவதி

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செல்லும் ரயில் தடத்தில் விரிசல் ஏற்பட்டதால், மின்சார ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமாதமாயின

TNN 26 Oct 2017, 9:36 am
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செல்லும் ரயில் தடத்தில் விரிசல் ஏற்பட்டதால், மின்சார ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமாதமாயின
Samayam Tamil chennai electric train late
மின்சார ரயில்கள் தாமதம்; பயணிகள் அவதி



சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயநகர் வழியாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இன்று காலை 7.00 மணிக்கு சென்னைண கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில் சுமார் 8.00 மணியாகியும் வராமல் இருந்தது.

இது குறித்து, கோடம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், ரயில் தண்டாவாளத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் ரயில் வருவதில் சிறிது காலதாமதமாகுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, சுமார் 8.15 மணிக்கு செங்கல்பட்டு மின்சார ரயில் வந்தது. ஏற்கனவே, கால தாமதத்தால், ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில், செங்கல்பட்டு ரயிலிலும் ஏராளமானவர்கள் இருந்ததால், படியில் பயணம் செய்யும் அவதி நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர்.

மேலும், அலுவலகம், பள்ளி செல்பவர்கள், சரியான நேரத்தில் போகமுடியாமல் அவதிக்குள்ளாகினர்.

அடுத்த செய்தி