ஆப்நகரம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கழுத்தறுத்து கொலை.!

சென்னை, பம்மல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 12 Dec 2017, 11:55 am
சென்னை, பம்மல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai family man murdered his family
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கழுத்தறுத்து கொலை.!


சென்னை பல்லாவரம் அருகே பம்மல் பகுதியில் கிருஷ்ணாநகர் ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாமோதரன். தாமோதரன் தனது தாய் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோஷன், மீனாட்சி ஆகியோரை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது குடும்பத்தினரை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததுள்ளது. நான்கு பேரும் உயிரிழந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற தாமோதரன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பம்மல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி