ஆப்நகரம்

Chennai: நாயுடன் நடைப்பயிற்சி வந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கிய நபர்!!

சென்னை நங்கநல்லூரில் நாயுடன் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணை, இரும்பு ராடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2018, 12:50 pm
சென்னை நங்கநல்லூரில் நாயுடன் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த நபர் இரும்பு ராடால் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Chennai: நாயுடன் நடைப்பயிற்சி வந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கிய நபர்!!
Chennai: நாயுடன் நடைப்பயிற்சி வந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கிய நபர்!!


சென்னை நங்கநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுணா. இவர் இன்று அதிகாலை தனது நாயுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, அவரது நாய் சக்தி என்பவரின் வீட்டின் சுவரில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த நாய் அதிக சத்தம் எழுப்பியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சக்தி, இரும்பு ராடால் நாயின் உரிமையாளரான சுகுணா என்பவரைக் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள சக்தியை மடிப்பாக்கம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், சக்தியின் அண்ணனை அழைத்துச் சென்று விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி