ஆப்நகரம்

தொடர் பழுது; சென்னை ஷோரூம் முன்பு பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த வாடிக்கையாளர்!

சென்னை: ஷோரூம் ஊழியர்கள் அலட்சியத்தால், தனது பைக்கை பொதுவெளியில் வாடிக்கையாளர் ஒருவர் எரித்துள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 4:08 pm
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கோபி. இவர் ரூ.60,000 ரொக்கமாக கொடுத்து, ஷோரூம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். 6 மாதங்கள் ஆன நிலையில், ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு குறை கூறி ஷோரூமை அணுகியுள்ளார்.
Samayam Tamil Bike


லைட் எரியவில்லை, பிரேக் பிடிக்கவில்லை, ஆயில் கசிவு என தொடர்ச்சியாக புகார் கூறி வந்துள்ளார். இதனால் தனது உயிர் போகும் அபாயம் கூட ஏற்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர் உரிய தீர்வு அளிக்காமல், அலட்சியம் செய்து வந்துள்ளனர்.

தனது அன்றாட வேலைகளைக் கவனிக்க இயலாமல், தினசரி மோட்டார் சைக்கிளை பிரச்சனையை தீர்ப்பதே பெரும்பாடாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஷோரூமிற்கு சென்று, தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிரச்சனை குறித்து கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் அலட்சியம் காட்டியதை அடுத்து, கோபத்தில் வண்டியில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி தீவைத்துள்ளார். இதைக் கண்டு அவசர, அவசரமாக ஓடி வந்த ஷோரூம் ஊழியர்கள் கோபிக்கு சமாதானப் படுத்த முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

Chennai guy burns his bike infront of showroom.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்