ஆப்நகரம்

சில மணி நேரத்திலேயே 20செமீ அளவிற்கு மழைப்பொழிவு; மிதக்கும் சென்னை மாநகரம்!

தொடர்மழை காரணமாக, மழைப்பொழிவின் அளவு அதிகரித்துள்ளது.

TNN 3 Nov 2017, 8:37 am
சென்னை: தொடர்மழை காரணமாக, மழைப்பொழிவின் அளவு அதிகரித்துள்ளது.
Samayam Tamil chennai has received nearly 20 cm since last evening
சில மணி நேரத்திலேயே 20செமீ அளவிற்கு மழைப்பொழிவு; மிதக்கும் சென்னை மாநகரம்!


வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில தினங்களிலேயே தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதில் சென்னை வழக்கம் போல அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உணவின்றி, இருக்க இடமின்றி தவித்தனர். இதே நிலை நடப்பாண்டிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

அவ்வாறான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வருகிறது. நேற்று மாலை சில மணி நேர மழை வெளுத்து வாங்கியது. அப்போது 20செமீ அளவிற்கு மழை பொழிந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் தத்தளித்து வருகின்றன. எழும்பூர் பகுதியில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்ற வண்ணம் உள்ளன.

அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Chennai has received nearly 20 cm since last evening.

அடுத்த செய்தி