ஆப்நகரம்

ப.சிதம்பரம் குடும்பத்தினரின் சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

வெளிநாடுகளில் சொத்து சேர்த்த வாங்கியது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Samayam Tamil 23 Jul 2018, 9:55 am
சென்னை: வெளிநாடுகளில் சொத்து சேர்த்த வாங்கியது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Samayam Tamil Chidambaram


காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்த போது, அவரது குடும்பத்தார் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இவை சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மகள் ஸ்ரீநிதி ஆகியோர் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.

இந்த சொத்து விவரத்தை வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டாமல் மறைத்துள்ளனர். இதனை எதிர்த்து, கருப்பு பணத் தடுப்பு சட்டத்தின் கீழ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில் சிதம்பரத்தின் குடும்பத்தாரை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து மனைவி நளினி, மகன், மகள் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது கருப்பு பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி முறையிட்டனர். ஏனெனில் கருப்பு பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறப்பு நீதிமன்றங்கள் ஏதும் இல்லை.

எனவே இந்த நடவடிக்கை செல்லாது என்று வலியுறுத்தினர். இந்த வழக்கில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Chennai High Court announces verdict for P.Chidambaram family case.

அடுத்த செய்தி