ஆப்நகரம்

சென்னை: எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாப பலி!!

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில், எஸ்கலேட்டரில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 15 Apr 2018, 12:25 am
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில், எஸ்கலேட்டரில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil சென்னை: எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாப பலி!!
சென்னை: எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாப பலி!!


கடந்த 10 ஆம் தேதி, நவீன் என்ற சிறுவன் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளான். அங்கு, இரண்டாவது விளையாடிக் கொண்டிருந்தபோது, பெற்றோர் கவனிக்காத வேளையில், எஸ்கலேட்டரில் இருந்து கீழே விழுந்தான்.

இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த அச்சிறுவனுக்கு, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமையன்று சிறுவன் நவீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்