ஆப்நகரம்

கோயம்பேடு காய்கறி சந்தை இரு நாள்கள் இயங்காது!

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Mar 2020, 7:56 am
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு நேற்று மாலை முதல் அறிவித்திருந்தது. இரவு 8 மணியளவில் மக்களிடம் கணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
Samayam Tamil கோயம்பேடு காய்கறி சந்தை இரு நாள்கள் இயங்காது


அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை தடையின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும் நேற்று தமிழ்நாடு முழுவதும் காய்கறி சந்தைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் பல இடங்களில் காய்கறி விலை உயர்ந்தது.

இன்றும் திருச்சி, சேலம் பகுதிகளில் மக்கள் அதிகளவில் காய்கறிகளை வாங்கிவருகின்றனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோயம்பேடு காய்கறி சந்தை இன்று திறந்திருந்தாலும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லை என்பதால் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் பலி!

இந்நிலையில் வெள்ளி, சனி ஆகிய இருநாள்கள் (மார்ச் 27, 28) கோயம்பேடு சந்தை இயங்காது என கோயம்பேடு வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்றும், நாளையும் வழக்கம்போல் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை மீண்டும் சந்தை செயல்படும்.

அடுத்த செய்தி