ஆப்நகரம்

காவலர் போல் ஆள் மாறாட்டம் செய்து வியாபாரிகளிடம் பண மோசடி செய்த நபர் கைது

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் காவலரை போல் ஆள்மாறாட்டம் செய்து கடைக்காரர்களிடம் பணம் வசூலித்த நபரை காவல்துறையினர் கைது செய்துனர்.

Samayam Tamil 5 Mar 2019, 6:42 pm
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் காவலரை போல் ஆள்மாறாட்டம் செய்து கடைக்காரர்களிடம் பணம் வசூலித்த நபரை காவல்துறையினர் கைது செய்துனர்.
Samayam Tamil 66300959


சென்னை, குமுடிப்பூண்டி பகுதியில் உள்ள கொண்டமனல்லூரை சேர்ந்தவர் சபாபதி . 25 வயதாகும் இவர் ரெட் ஹில்ஸ் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருக்கும் கடைப்பகுதிக்குள் சென்ற இருவர், தன்னை காவலர் என்று சொல்லிவிட்டு தீடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் காவலர் அணியும் உடையில் ஏன் வரவில்லை என்று கடைக்காரர்கள் கேட்டபோது, மறைமுக ஆய்வு செய்வதால் சாதாரண உடையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்ததால் அபராதமாக பணத்தை வாங்கிவிட்டு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற அவர் இரு காவலர்களிடம் மாட்டிக்கொண்டார். அவர்கள் சபாபதியை விசாரித்ததில் காவலர்களைப்போல் போலி அடியாள அட்டை வைத்து, இப்படி பல ஏமாற்று வேலைகளை செய்வதாக கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் சிறையிலடைத்தனர். மேலும் அவர் அடிக்கடி சினிமா தியேட்டர்களுக்கு சென்று தன்னை காவலர் என்று சொல்லிக்கொண்டு இலவசமாக திரைப்படம் பார்த்ததாக தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி