ஆப்நகரம்

பெரியார் சிலை அவமதிப்பு: சென்னையில் போதை ஆசாமி கைது

டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்த நரசிம்மலு, தகாத வார்தைகளை சத்தமிட்டு பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், பெரியார் சிலை மீது செருப்பை வீசியுள்ளார்

Samayam Tamil 3 Feb 2020, 3:06 pm
சென்னை: பெரியார் சிலையை அவமதித்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சிலைகளை அவமதிப்பதும், அவரை விமர்சிப்பதும் அதிகரிகரித்து வருகிறது. இன்றைய அரசியல் சூழலில் பெரியாரின் சிந்தனைகள் தேவைப்படும் பட்சத்தில் திட்டமிட்டு அவர் மீதான அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதாகவும், அவரது சிலைகள் அவமதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலை - சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசி அவமதித்துள்ளார். பொதுமக்கள் அவரை விரட்டி பிடிக்கும் அங்கிருந்து அவர் தப்பி விட்டதாக தெரிகிறது.

ராஜேந்திர பாலாஜி பேசுவது கட்சியின் கருத்து அல்ல: பேட்டைக்காரரான ஜெயக்குமார்

சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சிந்தாதரிப்பேட்டை போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நரசிம்மலு (59) என்பவரை கைது செய்துள்ளனர்.

கைதிகள் முரட்டு தாக்குதல்; ரத்தக் களறியான புதுச்சேரி சிறை - குறுக்கே வந்த போலீசாருக்கு செம அடி!

சம்பவம் நடைபெற்ற தினத்தன்று டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்த நரசிம்மலு, தகாத வார்தைகளை சத்தமிட்டு பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், பெரியார் சிலை மீது செருப்பை வீசியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி