ஆப்நகரம்

சென்னை மின்சார ரயில், பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்

சென்டரல், கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம், திருத்தணி, கடம்புத்தூர், அரக்கோணம் செல்ல வேண்டிய 46 மின்சார ரயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே நாளை(மே 19) பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2019, 7:52 pm
சென்டரல், கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம், திருத்தணி, கடம்புத்தூர், அரக்கோணம் செல்ல வேண்டிய 46 மின்சார ரயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil train-generic_625x300_1530031020800


இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சென்னை கடற்கரை - அரக்கோணம் தடத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் யார்டு தண்டவாள பணியும், சுரங்கபாதை அமைக்கும் பணியும் இன்று(மே 18) இரவு 9.40 மணி முதல் நாளை காலை வரை நடக்கவுள்ளது. இதனால் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அரக்கோணம் தடத்திலும் நாளை அதிகாலை 1.20 மணி முதல் காலை 10.45 மணி வரையில் பணி நடக்கவுள்ளதால் சென்டரல், கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம், திருத்தணி, கடம்புத்தூர், அரக்கோணம் செல்ல வேண்டிய 46 மின்சார ரயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று மேற்கண்ட வழிதடங்களில் இருந்து சென்னை சென்டரல் மற்றும் கடற்கரைக்கு செல்ல வேண்டிய 41 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், ஆவடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதே போல் மறுமார்கத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில்கள் இன்றும், நாளையும் இயக்கப்பட உள்ளன.

இதுபோன்று, சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே நாளை(மே 19) பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தடத்தில் 38 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு மதியம் 2 மணிக்கே முதல் ரயில் சேவை இருக்கும். இதேப்போல் வேளச்சேரியில் மதியம் 2.10 மணிக்கே முதல் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி