ஆப்நகரம்

பொங்கல் கொண்டாட்டத்தால் களைகட்டிய சென்னை மெட்ரோ ரயில்நிலையங்கள்!!

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் சிறப்பு பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

Samayam Tamil 17 Jan 2018, 5:20 am
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் சிறப்பு பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
Samayam Tamil chennai metro rail conducts pongal kondattam
பொங்கல் கொண்டாட்டத்தால் களைகட்டிய சென்னை மெட்ரோ ரயில்நிலையங்கள்!!


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயிலின் ஆலந்தூர் மற்றும் வடபழனி ரயில் நிலையங்களில் மேஜிக் ஷோவும் குழந்தைகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன.

சென்னை மெட்ரோ ரயில் பொங்கல் கொண்டாட்டம்-2018 என்று பெயரிடப்பட்ட அந்நிகழ்ச்சியின் சார்பில், வடபழனி ரயில்நிலையத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் ஆகியவை நடத்தப்பட்டன.

ஆலந்தூர் ரயில்நிலையத்தில், கோலப் போட்டிகளும் நடத்தப்பட்ட வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சுமார் 300 குழந்தைகள் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி