ஆப்நகரம்

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் முக்கிய அறிவிப்பு!

சென்னை: திறந்தவெளிக் கூட்டம் நடத்துவது குறித்து, மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Dec 2018, 7:00 pm
வரும் டிசம்பர் 8ஆம் தேதி திறந்தவெளி கூட்டம் நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது அனைத்து பகுதிகளிலும் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.
Samayam Tamil Metro Water


குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் கூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும் குடிநீர், கழிவுநீர் நீக்க வரி, புதிய இணைப்பு, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் தெளிவு பெறலாம்.

இந்தக் கூட்டம் ஒவ்வொரு மாத 2வது சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகும்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்பார்வை பொறியாளர் கூட்டத்தை நடத்துவார். கடந்த மாதம் இதேபோல் நடத்தப்பட்ட திறந்தவெளி கூட்டத்தில் 37 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அதில் 25 மனுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 மனுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ குடிநீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி