பெற்ற குழந்தைகளை கள்ளக்காதலுக்காக விஷம் வைத்துக் கொன்ற சென்னையைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள குன்றுத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வரும் இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும், அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
வேலை காரணமாக விஜய்யால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வரமுடியவில்லை. இதையடுத்து, நேற்று அதிகாலை வீடு திரும்பிய அவர், தனது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், தாய் அபிராமிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், கணவன்-மனைவி இடையே சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டதும், இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கணவர் விஜய் வீட்டிற்கு வராததையறிந்து, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்ததும் அம்பலமாகியது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அபிராமியை காவல்துறையினர் நாகர்கோவிலில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையிலேயே, கொலைக்கான உண்மையான காரணம் வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை அருகே உள்ள குன்றுத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வரும் இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும், அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
வேலை காரணமாக விஜய்யால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வரமுடியவில்லை. இதையடுத்து, நேற்று அதிகாலை வீடு திரும்பிய அவர், தனது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், தாய் அபிராமிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், கணவன்-மனைவி இடையே சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டதும், இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கணவர் விஜய் வீட்டிற்கு வராததையறிந்து, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்ததும் அம்பலமாகியது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அபிராமியை காவல்துறையினர் நாகர்கோவிலில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையிலேயே, கொலைக்கான உண்மையான காரணம் வெளியாகும் என கூறப்படுகிறது.