ஆப்நகரம்

சென்னை: தூங்கும் துறை தலைவர், அரசு கல்லூரி மாணவர்கள் புகார்

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் பொருளியல் துறை தலைவராக இருக்கும் பேராசிரியை பாடம் எடுக்காமல் தூங்குவதாக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

Samayam Tamil 28 Mar 2018, 9:22 pm
சென்னை அண்ணா சாலையில் உள்ள நந்தனத்தில், அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இங்கு பல்துறை பட்டப்படிப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
Samayam Tamil govt college


இந்நிலையில், அரசுக் கல்லூரியின் பொருளியில் துறை தலைவராக இருக்கும் பேராசிரியை வகுப்பு எடுக்க வராமல், மற்ற ஆசிரியர்களை அனுப்பவுதாகவும், அலுவலக கதவை தாழ்ப்பாள் போட்டு தூங்குவதாகவும் மாணவர்கள் அடுக்கடுக்காக புகார் கூறியுள்ளனர்.

மேலும், கல்லூரிக்கு வராமல் கட் அடிக்கும் மாணவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களை கண்டிக்காமல், தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், இதை பலமுறை கூறி எச்சரித்தும் அவர் எதையும் கேட்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

துறைதலைவரின் இந்த நடவடிக்கையை குறித்து கல்வித்துறை அமைச்சர், முதல்வர், அரசு உயர் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில், மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து புகார் மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த பேராசிரியை எதிராக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே கல்லூரியில் பணியமர்த்தப்பட்டார் என்பதையும் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்