ஆப்நகரம்

சென்னை: கடற்கரையில் பெண் மற்றும் குழந்தையின் சடலம் மீட்பு!

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 15 Dec 2018, 12:46 pm
சென்னை பட்டினப்பாக்கம்கடற்கரையில் பெண் மற்றும் மூன்று வயதுகுழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil download


சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரையில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக பட்டினப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பட்டினப்பாக்கம் காவல்துறையினர் சடலத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், வேப்பேரி காவல்நிலையத்தில்காமினி மற்றும் தனு என்ற 3 வயது குழந்தையை காணவில்லை என்று பரத் என்பவரால் புகார்கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் இறந்தவர்கள் காமினி மற்றும் தனு என்பதைஉறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இருவரும் உயிரிழந்ததற்கான காரணம் குறித்துவிசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்