ஆப்நகரம்

சுழன்று அடிக்கும் காற்று; சீறிப் பாயும் கடல்; மெரினா கலங்கரை விளக்கம் செல்ல தடை!

சென்னை: மெரினாவில் பலத்த காற்று வீசுவதால் கலங்கரை விளக்கம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Nov 2018, 6:54 pm
சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதற்கிடையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil Light House


இந்த சூழலில் மெரினா கடற்கரையில் அலைகள் பெரும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. பலத்த காற்றால் இரும்புத் தடுப்புகள் கீழே விழுந்துள்ளன. இவற்றால் பொதுமக்கள் வருகை குறைந்தே காணப்படுகிறது.

அவர்களையும் உடனே வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மெரினாவில் கடைகள் அடைக்கப்பட்டு, வாகனங்கள் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பலத்த காற்று வீசுவதால் கலங்கரை விளக்கம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி