ஆப்நகரம்

சென்னை: அரசு பள்ளியை தத்தெடுத்து உதவிய காவல்துறையினர்!

சென்னை காவல் துறையினர் அரசு நடுநிலைப் பள்ளியைத் தத்தெடுத்து உதவியதால் பாராட்டுகள் குவிகின்றன.

Samayam Tamil 6 Feb 2020, 4:02 pm
சென்னை நொளம்பூர் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. 1960 ஆம் ஆண்டு ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்ட இந்த பள்ளியானது 1990 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக மாறியது. இதில் 210 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 12 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil அரசு பள்ளியை தத்தெடுத்து உதவிய காவல்துறையினர்


இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் அரசு பள்ளியை தத்தெடுக்கும் யோசனையை முன்வைத்தனர். அதன் படி நொளம்பூர் பகுதியில் உள்ள இந்தப் பள்ளியை திருமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர், ஜெஜெ நகர், திருமங்கலம் காவல் துறையினர் தத்தெடுத்து கடந்த மூன்று மாத காலமாக புனரமைத்தனர். மேலும் பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள், மின் விசிறி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். பள்ளி வளாகத்தை சுற்றி பசுமை தோட்டம், மழை நீர் சேகரிப்பு போன்றவற்றையும் உருவாக்கியுள்ளனர்.

இதற்க்கான ஒப்படைப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் விஜயக்குமாரி, துணை ஆணையர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

கொரோனா அறிகுறியா: சென்னையில் சிகிச்சை பெறும் 2 சீனர்கள்!

உதவி ஆணையர் சிவக்குமார் கூறும் பொழுது விரைவில் இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை: ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு..! வீடியோ...

இது குறித்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறும் பொழுது பழுதடைந்து கிடந்த இந்த பள்ளியை சீரமைத்த காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்து கொண்டவர்கள் வசதியானவர்கள் அரசு பள்ளிக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

அடுத்த செய்தி