ஆப்நகரம்

இந்த 'ஆப்'களை யூஸ் பண்ணாதீங்க மக்களே... சென்னை போலீஸ் அட்வைஸ்!

பல்வேறு கடன்கள் வழங்குவது தொடர்பான செயலிகளின் (லோன் ஆப்) மூலம் முறைகேடுகள் நடைபெறுவதால், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை காவல் துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Dec 2020, 9:48 pm
சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கூகுள்‌, பிளே ஸ்டோரில்‌ உள்ள 50 க்கும் மேற்பட்ட கடன்கள் வழங்குவது தொடர்பான செயலிகள் (ஆப்) ரிசர்வ்‌ வங்கியால் பதிவு செய்யப்படவில்லை.
Samayam Tamil சென்னை பெருநகர காவல் துறை
சென்னை பெருநகர காவல் துறை -பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்


அதாவது இந்த loan app-களின் நடைமுறை செயல்பாடுகள்‌ அங்கீகரிக்கப்படாதவை. எனவே இந்த ஆப்களை பயன்படுத்துவோரின் செல்ஃபோனில் உள்ள அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமையை மீறும்‌ வகையில் பயன்படுத்‌துகின்றன.

எனவே கடன்‌ அடிப்படையிலான இத்தகைய செயலிகளை (loan apps) பயன்படுத்த வேண்டாமென பொதுமக்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நோ டிப்ஸ் ப்ளீஸ்...சென்னைவாசிகளுக்கு மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

அத்துடன் தங்களது ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு பெறாத, முறைப்படுத்தப்படாத ஆப்களில் பதிவிட வேண்டாம் என்றும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி லோன் ஆப்களின் வாயிலாக அச்சுறுத்தல்‌ அல்லது துன்புறுத்தல்‌ அழைப்புகள்‌ வந்தால் அதுதொடர்பாக பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்கலாம்.‌

மேற்கு வங்கம் டூ சென்னை... காதலனை தேடி சென்னை வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

லோன் ஆப்களின் உண்மைத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மின் வலைத்தளத்தில் சரிபார்க்கவும் பொதுமக்கள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி