ஆப்நகரம்

சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்படும் சென்னை கமிஷனர்..!

ஆட்டோவுக்கு காவலர் தீ வைக்கும் காட்சிகள் பரவி வருவதை தொடர்ந்து,சென்னை போலிஸ் கமிஷனர் ஜார்ஜை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

TNN 24 Jan 2017, 3:52 am
ஆட்டோவுக்கு காவலர் தீ வைக்கும் காட்சிகள் பரவி வருவதை தொடர்ந்து,சென்னை போலிஸ் கமிஷனர் ஜார்ஜை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
Samayam Tamil chennai police commissioner george trolled in social media
சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்படும் சென்னை கமிஷனர்..!


சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்களை,நேற்று காவல்துறையின் வெளியேற்றினர்.இதற்கு இளைஞர்கள் மறுப்பு தெரிவித்ததால்,அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.இதனால் சென்னையின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில் சென்னை சிட்டி சென்டர் பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றுக்கு,காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தீ வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியதைத் தொடர்ந்து,தமிழ்நாடு காவல்துறை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.மேலும் நேற்று நடந்த வன்முறைகள்,தமிழக காவல்துறை திட்டமிட்டு நடத்திய நாடகம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து நேற்று மாலை பேட்டியளித்த சென்னை கமிஷனர் ஜார்ஜ்,”ஆட்டோவுக்கு காவலர் தீ வைக்கும் காட்சியை நான் பார்க்கவில்லை.இந்த குற்றச்சாட்டு குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள்.உண்மை நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட காவலருக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்.”என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,வாட்ஸ் ஆப் போன்றவற்றில் சென்னை கமிஷனர் ஜார்ஜை கிண்டலடித்து பல்வேறு பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.குறிப்பாக ’தமிழக காவல்துறையில் வேலை வேண்டுமென்றால் ஆட்டோவை எரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.”என்ற தொனியில் பல மீம்ஸ்களும்,பதிவுகளையும் காண முடிந்தது.இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர் தமிழக காவல்துறையினர்.





Chennai police commissioner George trolled in Social media

அடுத்த செய்தி