ஆப்நகரம்

2020 புத்தாண்டை கொண்டாடப் போகிறீர்களா? போலீசார் விதித்த கட்டுப்பாடுகள் இதோ!

விரைவில் புத்தாண்டு பிறக்க உள்ளதை ஒட்டி, சென்னை போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

Samayam Tamil 29 Dec 2019, 12:03 pm
2019ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கப் போகிறது. இதையொட்டி பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
Samayam Tamil New Year


கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் புத்தாண்டை இனிதே வரவேற்று மகிழ்வர். பொது இடங்கள், கடற்கரை, கேளிக்கை விடுதிகள் என கொண்டாட்டங்கள் நடைபெறும்.

இதுபோன்ற சமயங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,

எங்கு, எத்தனை தொகுதிகளில்?- நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

* இரவு ஒரு மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.

* புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* நட்சத்திர விடுதிகளுக்கு வரும் நபர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.

* ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

சரவணா செல்வரத்னம் கடையில் பயங்கர தீ; அலறி அடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்!

* ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும்.

* கேளிக்கை நிகழ்ச்சிக்காக தற்காலிக மேடைகள் அமைத்தால், அதன் உறுதித் தன்மையை சரிபார்க்க வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.

* பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டில் போதையானவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் - தமிழ்நாடு காவல்துறை

இதேபோல் சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை ஆகிய பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். எனவே அங்கு பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி