ஆப்நகரம்

சென்னை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரின் உடல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 11:18 am
சென்னையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரின் உடல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ef0bb31e-26c5-4453-9576-2cc53f0bb17b.
மரத்தில் தூக்குப்போட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை


சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவிய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜோசப் (54). இவர், காசிமேடு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு பின்னால் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இவரது உடலை பார்த்த மீனவர்கள் சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காசிமேடு காவல்துறையினர், ஜோசிப்பின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பனிச்சுமை காரணமாக ஜோசப் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் சொந்த பிரச்னை காரணமாக இவரது மரணம் சம்பவதித்ததா என்ற கோணங்களில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக, தமிழகத்தில் காவல்துறையில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் ஜெயலலித்தாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல சென்னை அயனாவரத்தை சேர்ந்த எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக நடத்தபப்ட்ட ஆய்வு, காவல்துறையில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதை தான் என்று தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 166 காவலர்கள் தற்கொலை செய்துக்கொண்டதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இதுவரை, தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட காவலர்களுக்கு சொந்தப்பிரச்னை, பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்றவை தான் பின்னணி காரணங்களாக இருந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி