ஆப்நகரம்

சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- காவல் உதவி ஆய்வாளர் கைது!!

10 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் வாசு என்பவர், போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 2 Dec 2018, 5:48 pm
சென்னையில் 10 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் வாசு என்பவர், போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- காவல் உதவி ஆய்வாளர் கைது!!
சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- காவல் உதவி ஆய்வாளர் கைது!!


சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வாசு என்பவர், அவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், கதறி அழுத அந்தச் சிறுமியின் அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கே ஓடி வந்துள்ளனர்.

இதையடுத்து வாசு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். விசாரித்ததில், சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாசுவை அடித்து துவைத்து, வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது.

இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்குச் செல்லவே, காவல் துறை குழந்தைகள் நல அலுவலர் சிறுமியை அழைத்து விசாரித்துள்ளார். அதில், அந்தச் சிறுமியை கடந்த 4 மாதங்களாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, காவல் உதவியாளர் வாசு மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்