ஆப்நகரம்

ரவுடியை விடுவித்த சிறைக்காவலர் சஸ்பெண்ட்!

சென்னையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரவுடியை விடுவித்த சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Samayam Tamil 17 May 2018, 11:43 pm
சென்னையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரவுடியை விடுவித்த சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Samayam Tamil police suspend


சென்னை தண்டையார்பேட்டையைச் சேனியம்மன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (26). இவர் ஜீவா என்பவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து, தீர்ப்பாயத்தில் ரவி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பாயம் விசாரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்தி சிறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.



தீர்ப்பாயம் அனுப்பிய கடிதத்தை அவசர கதியில் படித்த சிறைக்காவலர் பிரதீப் என்பவர் தவறாக புரிந்து கொண்டு, ரவிச்சந்திரனை கடந்த 28ம் தேதி விடுவித்தார். இதனையடுத்து ரவுடி ரவிச்சந்திரனை விடுவித்த சிறைக்காவலர் பிரதீப் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள ரவிச்சந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி