ஆப்நகரம்

மயானம் இயங்காது.. திடீர் அறிவிப்பு; பொதுமக்கள் ஷாக்!

பராமரிப்பு பணி காரணமாக மயானம் இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Samayam Tamil 3 May 2022, 3:17 pm
சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
Samayam Tamil போரூர் மயானம்
போரூர் மயானம்


சென்னை வளசரவாக்கம் மண்டலம், ஆற்காடு சாலையில் போரூர் மின்சார மயான பூமி அமைந்துள்ளது. இந்த மயான பூமியில் அமைக்கப்பட்டுள்ள புகைப்போக்கி பழுது அடைந்துள்ளது.

எனவே போரூர் மயான பூமியில் பழுது பார்க்கும் பணி நடைபெற இருப்பதால் இன்று மே மாதம் 3ம் தேதி முதல் வருகிற 22ம் தேதி வரை 20 நாட்களுக்கு மயான பூமி இயங்காது.

களேபரத்தில் ரமலான்; காவல் நிலையத்தில் முஸ்லிம்கள் மோதல்!

போரூர் மயான பூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள வார்டு 149க்கு உட்பட்ட பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி