ஆப்நகரம்

ரயில் பயணத்தில் உடல்நல பாதிப்பா? தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் சென்னையில் தொடக்கம்!

ரயில் பயணத்தில் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

TNN 21 Jan 2018, 11:06 am
சென்னை: ரயில் பயணத்தில் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai railway division introduces emergency medicine plan in trains
ரயில் பயணத்தில் உடல்நல பாதிப்பா? தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் சென்னையில் தொடக்கம்!


சென்னை சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி ஆய்வு செய்தார்.

அப்போது சென்ட்ரல் ரயில் நிலைய வரைபடம் மற்றும் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஊழியர்களுக்கான உணவகம், பெண்கள் கழிப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வனி, ரயில் பயணத்தின் போது மாரடைப்பு வந்தால், பயணிகளுக்கு வழங்க 3 மருந்துகளை ரயில்வே போலீசார் வைத்திருக்க வேண்டும்.

இதற்காக சென்னை ரயில்வே கோட்டத்தில் தடுப்பு மருத்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். பின்னர் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

Chennai Railway division introduces emergency medicine plan in Trains.

அடுத்த செய்தி