ஆப்நகரம்

Chennai Rains: பூண்டி, புழல், செம்பரபாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 24 Nov 2018, 11:34 am
தமிழகத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Samayam Tamil dc-Cover-ohnv44t79a08a5njpiosfa35e1-20181117072255.Medi.
பூண்டி, புழல், செம்பரபாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு!


பூண்டி ஏரிக்கு நேற்று 139 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 169 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி நீர் இருப்பு 373 மில்லியன் கனஅடியில் இருந்து 384 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

புழல் ஏரிக்கு நேற்று 160 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 196 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 1133 மி.கன அடியில் இருந்து 1143 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 179 கனஅடி தண்ணீர் வந்தது. இதனிடையே மழை இல்லாததால் இன்று நீர்வரத்து 41 கனஅடியாக குறைந்துவிட்டது. ஏரியில் 206 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரி பகுதியில் போதிய மழை பெய்யாததால் இன்று தண்ணீர் வரத்து இல்லை. ஏரியில் 40 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

நான்கு ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு 1,645 மில்லியன் கனஅடியாக உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் 4,524 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி