ஆப்நகரம்

நீட் தேர்வை எதிர்த்து அரசுப் பள்ளி மாணவிகள் சாலைமறியல்!

பள்ளி மாணவிகள் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

TNN 9 Sep 2017, 2:25 pm
சென்னை: பள்ளி மாணவிகள் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai school students protest against neet
நீட் தேர்வை எதிர்த்து அரசுப் பள்ளி மாணவிகள் சாலைமறியல்!


சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் நீட் தேர்வை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய், தடை செய், நீட் தேர்வை தடை செய் என்ற வாசகத்தை தொடர்ந்து விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பள்ளி மாணவிகளின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலைமறியலில் ஈடுபட்ட மாணவிகளை, குண்டுக்கட்டாக தூக்கி சாலையோரம் அமர்த்தினர். இதற்கிடையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து மாணவிகளை சமாதானப்படுத்த ஆசிரியர்கள் முயற்சி செய்தனர்.

உங்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடுகிறோம் என்று போலீசாரிடம் மாணவிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Chennai school students protest against NEET.

அடுத்த செய்தி