ஆப்நகரம்

சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்! வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.

Samayam Tamil 24 Mar 2018, 5:36 pm
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.
Samayam Tamil saravana stores bomb



பிரபல சூப்பர் மார்க்கெட், நகை கடை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என வணிகத்தில் முக்கிய இடத்தில் சரவணா ஸ்டார்ஸ் இருந்து வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சரவணா ஸ்டோர்ஸஅ செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகளை விட சரவணா ஸ்டோர்ஸில் விலை சிறிது குறைவாக இருப்பதாக மக்கள் எண்ணுவதால், இங்கு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது
இந்நிலையில், இன்று தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு அடையாளம் தெரியாத நபர், தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகம், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்று சனிக்கிழமை என்பதால், பெரும்பாலான மக்கள் தியாகராய நகருக்கு பொருட்கள் வாங்க வருவார்கள். இதன் காரணமாக ரங்கநாதன் தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், மேற்கு வங்களாத்தைச் சேர்ந்தவராக இருக்காலம் என்றும், அவர் யார், எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்