வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள சேவூர் ரயில் நிலையத்தில் மின் வழித்தடத்தில் திடீரென கம்பி அறுந்து விழுந்துள்ளது. சுமார் 4 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தால் அந்த வழியாக சென்ற சென்னை - கோவை இண்டர்சிட்டி விரைவில் ரயில் மீது கம்பி விழுந்தது. ஆனாலும், தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்பி அறுந்து விழுந்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காட்பாடி ரயில் நிலைய பொறியாளர்
குழு அறுந்து விழுந்த கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,
சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காட்பாடி ரயில் நிலைய பொறியாளர்
குழு அறுந்து விழுந்த கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,
சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.